புதிய கோவில் எப்படி கட்ட முடியும்?
ஒரு ஊரில் பாழடைந்த கோவில் இருந்தது. "அது எப்போது கட்டப்பட்டது?' என்று யாருக்கும் தெரியாது. எந்த நேரத்திலும் இடிந்து விழுந்துவிடும் என்ற நிலையில் இருந்தது. அச்சம் காரணமாக, அந்தக் கோவிலுக்குச் செல்வதை அறவே நிறுத்தி விட்டனர் மக்கள். கோவில் வழியாக மக்கள் செல்ல நேர்ந்தால், வேகமாக நடந்து அந்த இடத்தைக் கடப்பது வழக்கம். அதற்கு, நம் மீது கோவில் இடிந்து விழுவதற்குள், அந்த இடத்தைக் கடக்கவேண்டும் என்று நினைத்தது தான் காரணம். அந்த ஊர் பெரியவர்கள் சிலர், கோவிலின் முன்னேற்றத்தின் பொருட்டு, ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். ஒரு நாள் அது பற்றி கலந்தாலோசிப்பதற்கு ஓர் இடத்தில் கூடினார்கள். அவர்கள் நடத்திய அந்த ஆலோசனை கூட்டம், கோவிலுக்குள் நடைபெறவில்லை. "கோவிலுக்குள் கூட்டம் நடைபெறும் சமயத்தில், தங்கள் மீது கோவில் இடிந்து விழுந்து விட்டால் என்ன செய்வது?' என்று அவர்கள் பயந்தது தான் காரணம். எனவே கோவிலுக்குச் சற்று தூரத்தில் தான் அவர்கள் கூடிப் பேசினார்கள். ஆலோசனை கூட்டத்தில், "கோவிலில் மிகவும் மோசமாக இருக்கும் பகுதிகளைச் செப்பனிட வேண்டும். வெளிச